Tuesday, December 30, 2008


Kavimani kavithai

kavimani

plz click 2008 year

kavimani kavithai

அன்புள்ள காதலிக்கு
உண்மையை மட்டுமல்ல
உணர்வுகளையும் சொல்ல
ஒரு கடிதம்

குணம் மாறாமல் இருக்க
ம்ண்ணோடு சேர்த்து பிடுங்கி
நடப்படும் செடிபோல
எங்கெங்கோ இருந்து எடுத்து
நாம் நடப்பட்டோம்
அன்று சோலையில்

கொட்டிவைத்த மணலில்
நட்டுவைத்த செடியில்
துளிர்விட்ட மலர்மொட்டுபோல்
நம் நெருக்கம் தொடங்கியது
சின்னப் புன்னகையால்

பிரிவென்றும்
முறிவென்றும் தெரியாது
புன்னகையும் எண்ணங்களும்
ஒன்று சேர்ந்து வார்த்தைகளின்
உதவியால் வளரத்தொடங்கியது
நாற்பத்தெட்டு மாதங்களிடையே
நம் வசந்த உறவு

ஆஹா!
அத்தனை அழகான உறவு-இன்று
கண்மூடும் பொழுதெல்லாம்
கனவிலும் நினைவிலும்
கண் நீரின் துணையோடு
நான் காணும் காட்சிகளாக
மட்டும்

எவர்கண் பட்டதென்று
தெரியவில்லை
இருவேறு துருவங்களாய்
இன்று எங்கெங்கோ
வாழ்கிறோம்

அக்கரையில்
நீ வாழ்கிறாயென்றால்
அக்கறையோடு அலைதாண்டியும்
வந்திடுவேன்
எக்கரை என்றே தெரியாதபோது
இக்கரையில் நிற்கிறேன்
நிற்கதியாய் நான்

முட்களுக்கு மத்தியில்
வளரும் ரோஜாபோல்
உன் நினைவுகளுக்கு
மத்தியில் இன்று நான்

தன்னை உருக்கி வெளிச்சம்
கொடுக்கும் மெழுகுபோல்
என்னை உருக்கி வாழ்கிறது
உன் நினைவுகள்

பெண்ணே!
உண்மையில் துடிக்கும் இதயம்
ஒவ்வொருவருக்கும் இரண்டு
ஒன்று துடிக்கையில் மற்றொன்று
ஓய்வில்…
எனக்கோ இரண்டும் ஓய்வில்
உன் நினைவுகளில் வாழ்வதனால்

நித்தமும் என்னைக் கொன்று
நிஜங்களைத் தின்று
நிழலிலும் நினைவிலும்
கடக்கின்றது
என்……..காலம்

கனவுகளும் கற்பனையும்
இல்லையென்றால் என்றோ
காலாவதியாயிருக்கும்
என் வாழ்வு

இது முகவரியில்லா கடிதம்
மட்டுமல்ல
வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும்

முதல்வரிக்கு நீ
கொடுக்கும் தொடக்கமே முடிவு
இந்த கவிதைக்கும் வாழ்வுக்கும்
என் காதலியே!

Kavimani Kavithai

..........ம்ம்ம்ம்ம்ம்

சூழ்நிலையால விலகினோமா

இல்லை

வசதிக்காக விலகினோமா

காரணிகள்(factors) காரணமாயிரம் சொல்லலாம்

கொஞ்சம் தளர்ந்துதான் போய்விட்டோம்

இதுவரை இப்படி இருந்ததில்லையே

ஏன் விலகினோம் உயிரே....

மீண்டும் மிருகவேஷம் போட்டு

பரபரப்பாய் திரிகிறேன்

யாரை ஏமாற்றுகிறேன் தெரியவில்லை.....

உணர்வுகளை தள்ளி வைக்கலாம்

உயிரை தள்ளி வைக்கமுடியுமா

வைத்திருக்கிறேனே.....

எப்படி இதெல்லாம் எனக்கு மட்டும்

சாத்தியமாகிறது.....

நீ கேட்ட போதெல்லாம்

வராத கவிதை இப்போது

மட்டும் எப்படி சரளமாய்...

காதலில் தோற்றுவிட்டேனோ

ம்ம்ம்ம்ம்ம்........

KAvimani Kavithai

கண்களாக நீ,
கண்ணீறாக நான்,
தெரியாமல் கூட அழுது விடாதே,
"நான் உன்னை விட்டு பிரிந்து விடுவேன்''.!

Kavimani Kavithai

“காதல்” செய்ய
பணம் தேவை இல்லை ,
குணம் தேவை இல்லை ,
படிப்பு தேவை இல்லை ,
கண்கள் மட்டும் இருந்தால் போதும்
“அழுவதற்கு”

Kavimani Kavithai

உன் அழைப்புக்காக காத்திருப்பது
நான் மட்டும் அல்ல
நம் காதலும்தான்..

kavimani kavithai

அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில்
அமர்ந்து அழு….
உன்னால்

நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில்
முளைத்திட்ட
சிறு செடியாவது
வாழட்டுமே…

நம் காதலின் சின்னமாக…..

Kavimani Kavithai

இறப்போம் என்று தெரியாமல்
பிறந்துவிட்டோம்-அது நம்
தவறல்ல
இறந்திடுவோம் என்று தெரிந்தும்
பெற்றுவிட்டார்கள் அது
அவர்களின் தவறும் இல்லை

அதுபோல்தான்....
நீ மறுப்பாய் என்று தெரியாமல்
காதலித்துவிட்டேன்-அது
உன் தவறல்ல
நீ மறுக்கிறாய் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் -இதில்
என் தவறும் இல்லை

எல்லாம் காதலின் தவறு மட்டுமே?

Kavimani kavithaikal

En ithaya nathiyin
odamaai
enrum un ninaivuhal
odikkondeyirukkum !!