Tuesday, December 30, 2008

Kavimani Kavithai

..........ம்ம்ம்ம்ம்ம்

சூழ்நிலையால விலகினோமா

இல்லை

வசதிக்காக விலகினோமா

காரணிகள்(factors) காரணமாயிரம் சொல்லலாம்

கொஞ்சம் தளர்ந்துதான் போய்விட்டோம்

இதுவரை இப்படி இருந்ததில்லையே

ஏன் விலகினோம் உயிரே....

மீண்டும் மிருகவேஷம் போட்டு

பரபரப்பாய் திரிகிறேன்

யாரை ஏமாற்றுகிறேன் தெரியவில்லை.....

உணர்வுகளை தள்ளி வைக்கலாம்

உயிரை தள்ளி வைக்கமுடியுமா

வைத்திருக்கிறேனே.....

எப்படி இதெல்லாம் எனக்கு மட்டும்

சாத்தியமாகிறது.....

நீ கேட்ட போதெல்லாம்

வராத கவிதை இப்போது

மட்டும் எப்படி சரளமாய்...

காதலில் தோற்றுவிட்டேனோ

ம்ம்ம்ம்ம்ம்........

No comments:

Post a Comment